குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு யாரும் வாழ்வது கிடையாது. அவருடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணமும் சிறிது அளவு இல்லாமல்

போனது. அன்றாடம் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டு அவர்களுடைய சொந்த சுகபோகத்திற்காக பணத்தை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ரூபாய் ஐநூறு சம்பாதிக்கும் ஒரு நபர் 350 ரூபாய் வரையில் சாராயம் குடிப்பதற்காக செலவு செய்து விடுகிறார். குடும்பத்திற்கு என்று ஒதுக்கும்போது அதில் பல சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்படுகிறது. மனைவியானவள் இப்படி குடித்துவிட்டு காசை கரியாக்குகிறீர்கள் என்று சொன்னாலும் நம் மனதில் அது புரிவது இல்லை.
சரி மனைவிக்கு அடிமையாகி இருந்துவிடலாம் என்று நினைத்தால் கொடிக்கு அடிமையாகி மாறி விடுகிறோம். ஒரு நாள் நிறைய பணம் சம்பாதித்து விட்டால் அனைத்தையுமே குடிக்காக இழந்து விடுகின்றோம். குடி மனிதனை மட்டுமல்ல ஒரு குடும்பத்தையும் சின்னா பின்னமாக்குகிறது. தன் குடும்பத்திற்கு சேர்த்து விட்டு குடிக்க வேண்டும். தன் குடும்பத்திற்கு பணம் இல்லை என்றால் குடிக்காமலேயே இருக்க வேண்டும்.
குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு ஆனால் அரசாங்கம் கேடைத்தான் விளைவித்துக் கொண்டிருக்கிறது.
அரசியல் எவ்வாறு நடக்கிறது சாராயத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடியை கண்டுபிடித்தவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது. ஆனால் அவன் கண்டுபிடித்த குடியை குடித்துவிட்டு நான்தான் செருப்பால் அடி வாங்கிக் கொண்டிருக்கிறோம். விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவைகள் யாவும் குடித்துக் கொண்டு அல்ல. மனிதனாகிய விலங்கு இங்கு குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறது. இன்றிலிருந்து குடித்து விடக்கூடாது என்ற எண்ணமும் குடிக்கும்போது மட்டுமே வருகிறது. அந்தக் குடியை எப்படி நிறுத்துவது. இப்படியான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போனாலும் குடி என்பது நம் வாழ்வின் அன்றாட ஒரு சொந்தமாகிவிட்டது. விற்பவர்கள் விற்காவிட்டால் அந்த குடியை நாம் ஏன் ஏற்கப் போகிறோம். மதுபானம் விற்கும் இடம் தனியாக இருந்தாலும் அங்கே கல்லா கட்டுவது என்பது பெரிதாக இருக்கிறது. ஓ அரசாங்கமே இப்படிப்பட்ட ஈனச் செயல்களை செய்வதை விட்டுவிட்டு மனிதர்களை நல்வழிப்படுத்த டூப்ளிகேட் சாராயத்தை விற்கும் நீங்கள் அதை தடை செய்யவும் வேண்டும் என்று தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் போட்ட ஓட்டுக்கு நீங்கள் செய்யும் நன்மை எங்கள் வீட்டுக்கு குடியை ஒழியுங்கள் குடிப்பவர்களை திருத்துங்கள் மது விற்பதை நிறுத்துங்கள் வாழ்க தமிழ்நாடு.. வளர்க தமிழ்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்