விநாயகரைப் பற்றி ஒரு இஸ்லாமிய சொல்லக்கூடிய தகவல்


 அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. இன்னைக்கு நம்ம பார்வதி தேவி மற்றும் சிவனுடைய பிள்ளையான பிள்ளையாரைப் பற்றி பார்க்க போகிறோம். பிள்ளையார் என்பவர் யானைத் தலையுடன் இருக்கக்கூடிய இந்து மதக் கடவுள். இவரின் தலையை சிவபெருமான் கோபத்தில் வெட்டி விடுகிறார். பின்பு ஒரு பகுதிக்குச் சென்று யானையின் தலையை எடுத்து வைத்து கஜமுகன் ஆக்கி விடுகிறார். இதுவே பிள்ளையார் உருவான கதையாக பார்க்கப்படுகிறது. மேலும் பார்வதி தேவியின் அழுக்கில் இருந்து பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது. பிள்ளையாருக்கு தமிழகப் பகுதிகளில் திருமணம் இன்றி தன்னுடைய தாயின் அழகுக்கு நிகரான ஒரு பெண்நே எனக்கு வேண்டும் என்று சொல்லி ஆற்றங்கரையிலும், குலத்தங்கரையிலும், அரச மரத்து அடியிலும் கடவுளாக இருந்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வடநாட்டுப் பகுதிகளில் அவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறாக விநாயகரைப் பற்றி வெவ்வேறு கதைகள் உள்ளன. இதில் உண்மையான கதை என்ன என்பதை பார்ப்போம்.


இஸ்லாமியர்கள் ஆதம் நபி, ஏவாள் என்ற இருவரை நம்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் மனிதக் கூட்டங்களை விருத்தி செய்தவர்கள் என்று எண்ணப்படுகிறது. அவ்வாறாக இருக்கும் ஆதாம் மற்றும் ஏவாள் இந்து மதத்தில் கூறக்கூடிய ஆதி பகவான் என்று சொல்லக்கூடிய சிவனும், அவ்வை என்று சொல்லக்கூடிய பார்வதி தேவியும் இருக்கிறார்கள். இந்த இருவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது விநாயகர், முருகன் மற்றும் ஐயப்பன் என்பவர்கள் சிவன் பார்வதி பிள்ளைகளாகவும், ஆதாம் மற்றும் ஏவாளுக்கு ஆபேல், காயின், சீத் என்று சொல்லக்கூடிய மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள். இதைக் கொண்டு பார்க்கும் போது ஒரே ஒரு வரலாற்றைத்தான் இந்த இரண்டு மதங்களும் கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில் இருக்கும் கதை தான் மாற்றப்பட்டுள்ளது. அங்கேயும் ஆதாமின் பிள்ளைகள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதில் காயின் என்ற சகோதரரால் ஆபேல் கொல்லப்படுகிறார். இறந்து போன ஆபேலை ஒரு காகத்தின் வழிகாட்டுதல் மூலமாக புதைக்கப்படுகிறார். இவ்வாறாக மனிதகுலம் ஆரம்பிக்கிறது. இறந்து போனவரை புதைத்த அந்த முறையை இஸ்லாமியர்கள் பின்பற்றத் தொடங்கினர்.


இங்கே வெட்டப்பட்ட தலையை மீண்டும் யானைத் தலையாக பொருத்தி இந்து மக்கள் கடவுளாக வழிபட்டு விடுகிறார்கள். அங்கே ஆபேல் மற்றும் காயினுக்கு சண்டை நடக்கிறது. இங்கே விநாயகர் மற்றும் முருகனுக்கு சண்டை நடக்கிறது. இங்கே ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விநாயகருக்கு மட்டுமே விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அவரை சிலையாக வடித்து மக்கள் பூஜை செய்து, அவரைக் கொண்டு போய் கடலில் அல்லது ஆற்றில் கரைத்து விடுகிறார்கள். ஆனால் முருகனுக்கும் தர்மசாஸ்தா என்று சொல்லக்கூடிய ஐயப்பனுக்கும் இதுபோல் நடப்பதில்லை. இதன் மூலமாக விநாயகர் கதை வாயிலாகவும், இஸ்லாமியர்கள் சொல்லக்கூடிய தன் வாயிலாகவும் இறந்து போனவர் என்று உணரப்படுகிறது. இஸ்லாமியர்களின் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு யூத பிராமணர்கள் தங்களுடைய இடைச் சொருகல்களை அதிலே சேர்த்துக் கொண்டு, இப்போது இருக்கும் இந்து மக்களை நம்ப வைத்து பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.

(முருகன் மற்றும் காயின் புராணம்

👇👇

Must watch )

இப்போது ஒன்று கேட்கலாம். இஸ்லாம் தோன்றி 1400 வருடங்கள் தானே ஆகியுள்ளது. ஆனால் இந்து வரலாறு பல வருடங்களைக் கடந்தது என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் முதன்முதலாக தோன்றிய மார்க்கம் இன்று இஸ்லாமியர்கள் சொல்லிக் கொண்டிருக்க கூடிய இஸ்லாம் மார்க்கம் தான். அதையே இறைவன் இந்த பூமியில் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நபிமார்களின் வாயிலாக கற்றுக் கொடுத்து வருகிறார். இந்த உண்மைகளை மாற்றி தங்களின் பயனுக்காக இதை பயன்படுத்தும் போது அந்த உண்மையை தெரிவிக்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு உள்ளது. எனவே தான் ஒவ்வொரு சமுதாயத்திற்காக நபிமார்களை அனுப்பி வைக்கின்றான். அவர்களை நம்புகிறவர்கள் இஸ்லாமியர்கள் என்றும், அவர்களை நம்பாதவர்கள் இந்துக்கள் என்றும் கூறப்படுகிறது.


இவ்வாறாக உலக மக்களுக்கே இறைவன் ஒரு தூதுவரை அனுப்புகின்றான். அவர்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்). அவர் மூலமாக நமக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் தான் திருக்குர்ஆன்.அதில் சிவபெருமானின் குடும்பத்தை பற்றி ஆதாம், ஏவாள் என்ற கதையின் அடிப்படையில் அமைந்து இருக்கின்றது. மேலும் விநாயகருக்கும் முருகருக்கும் நடந்த அந்த சண்டையானது அழகிய முறையில் விவரிக்கப்பட்டுள்ளது. இதனை வைத்தே  இச்சிறு கட்டுரையை உங்களுக்காக பதிவிடுகின்றேன். இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்கு அழகிய முறையில் பதிவிடுங்கள். மேலும் இதில் எழும்பக்கூடிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். இஸ்லாமியர் என்ன கூடிய நபிமார்களை இந்து மக்கள் கடவுளாகவே பார்க்கின்றனர். எனவே எனது அடுத்த பதிவுகளில் "இஸ்லாமிய நபிமார்களும் இந்துக்களின் கடவுள்களும்" என்ற தலைப்பில் வரிசையாக பார்க்கலாம். அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது – உங்கள் முன்னோன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலக பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா?

யூசுப் நபியின் வரலாற்றை பற்றி ஒரு நெருக்கமான பார்வை

இஸ்லாமியர்கள் கூறக்கூடிய 25 நபிமார்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும்