கரூர் மாநாட்டின் பேரழிவு – அரசியல் நாடகமா? மக்கள் பலிகடாவா?

 

விஜய் பேசிய கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்தது என்ன

கரூர் மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒரு சாதாரண விபத்தா? அல்லது அரசியல் களத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என்பதை இன்றைய தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய நேரம் இது.

ஒரு பிரபல நடிகர், அரசியலில் புதிய பாதையை எடுத்து வைக்க முயற்சிக்கும் நிலையில், திடீரென இத்தகைய அசம்பாவிதம் நிகழ்வது சாத்தியக்கூறு குறைந்த விஷயம் அல்ல. ஏனெனில், இதற்கு முன்பு நடந்து முடிந்த எந்தப் பிரச்சாரக் கூட்டத்திலும் இத்தகைய விபத்துக்கள் நிகழவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்று சீராகவே முடிந்து விட்டன. ஆனால் கரூரில் மட்டும் சூழ்நிலை வேறுபட்டது.அது செந்தில் பாலாஜியின் கோட்டை என்பது ஸ்டாலினின் வாக்கு

முதலாவது கேள்வி:

ஏன் இத்தகைய நெருக்கடியான இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது?

பெரிய அளவில் மக்கள் திரளக் கூடிய நிகழ்ச்சிக்கு, திறந்த வெளி தேவை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும். ஆனால் கரூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் குறுகிய இடத்தைத் தேர்வு செய்தது, சாதாரண தவறல்ல. இது “மக்களை பலியிடும் அரசியல் திட்டமா?” என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.


அரசாங்கத்தின் பொறுப்பு:

நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பே, பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதுவும் கூட, அரசு மற்றும் காவல்துறை மக்கள் கூட்டத்தின் தன்மையை நன்கு அறிந்திருந்தும், எந்தத் தகுந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, மக்கள் கூட்டம் கூடும் இடத்தை மேலும் நெருக்கமாக்கி விட்டனர். இது தான் முதன்மையான தவறு.


திமுகவின் அரசியல் கணக்கு:

விஜய், மக்கள் மத்தியில் நல்லவராகவும், சுத்தமானவர் எனவும் பெயர் பெற்றவர். அவரை நேரடியாக அரசியலால் வீழ்த்த முடியாது என்பதை திமுக நன்கு அறிந்திருந்தது. அதனால், மறைமுகமாக அவரின் பெயரை கெடுக்கவும், மக்கள் மத்தியில் அவர் நடத்தும் கூட்டங்கள் அபாயகரமானவை எனவும் சொல்ல ஒரு சூழ்நிலை தேவைப்பட்டது. கரூரில் நடந்தது, அந்த சூழ்நிலைக்கான “செயற்கை ஏற்பாடு” போலவே தெரிகிறது.

இதைச் சற்றே ஆழமாகப் பார்ப்போம்.

மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது முழுமையாக நம்பிக்கை வைத்து, விஜயின் ஆரம்ப அரசியல் முயற்சியையே அடியோடு தகர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்ததாக பலரும் கூறுகின்றனர். "தொட்டிலை ஆட்டி பிள்ளையை கிள்ளி விடுவது" போல, மக்கள் உயிரையே அரசியல் பலியாகியிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

விஜயின் கேள்விகள்:

மாநாட்டில் பேசும்போது விஜய் நேரடியாக காவல்துறையிடம், “ஏன் இப்படி நெருக்கமான இடத்தில் எங்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? ஏன் காவல் துறை கைகளை கட்டிவிட்டது போல இருக்கிறது?” என்று கேட்டார். இது அவருக்கு முன்னதாகவே சந்தேகம் இருந்ததை காட்டுகிறது. அவர் நிகழ்ச்சிக்கு வந்த மக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை தெரிவித்திருந்தார். ஆனால் அந்தக் கவலைக்கு அரசு எந்தச் செயலும் செய்யவில்லை.


மக்களின் பலி – யார் பொறுப்பு?

இன்று 40க்கும் மேற்பட்ட உயிர்கள் போய்விட்டன. அவர்கள் குடும்பங்கள் அழிந்துவிட்டன. இவை யாவும் ஒருவரின் அரசியல் விளையாட்டுக்காக நடந்ததாக இருந்தால், அது வரலாற்றில் மிகக் கொடிய குற்றமாகும். மக்களை ஏமாற்றியும், பலியாகியும் தான் தங்கள் அரசியல் பிழைப்பை உறுதி செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றால், இது இனி தமிழ்நாட்டில் யாரும் சகிக்க மாட்டார்கள்.

விஜய்யை குறிவைக்கும் சதி:

இந்த சம்பவத்தின் பின், அரசு மற்றும் எதிரிகள் பேசும் வரிகள் ஒரே மாதிரி தான் – “விஜய் கூட்டங்களில் பாதுகாப்பு இல்லை”, “இப்படி நடந்தால் அவரின் பிரச்சாரங்கள் ஆபத்தானவை” போன்ற கூற்றுகள். இதன் பின்னணி தெளிவாகவே இருக்கிறது. மக்கள் மத்தியில் விஜயை "தீயவர்" எனக் காட்டும் முயற்சி. அவர் நடத்தும் பிரச்சாரங்களை மக்கள் பயந்து தவிர்க்கும் நிலையை உருவாக்குவதற்கான அரசியல் யோசனை.


முடிவுரை:

கரூர் மாநாட்டின் பேரழிவு ஒரு சாதாரண விபத்து அல்ல. இது அரசியல் சதியின் உச்சக்கட்டம். மக்களின் உயிரை பலியாக்கி, ஒரு புதிய அரசியல் சக்தியை அடக்க முயற்சித்த அரசாங்கத்தின் கரும்பக்கம் வெளிப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டும்:

“எங்கள் உயிர்களே உங்கள் அரசியல் விளையாட்டின் பொம்மையா?”

விஜய் நல்லவராக இருந்தாலும், அரசியல் பாதையில் அவரைத் தடுக்க எந்த அளவிற்கும் செல்லும் ஆற்றல் திமுகவினருக்கு இருக்கிறது என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது. ஆனால் உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வருவது நிச்சயம். கரூரில் பலியான அந்த உயிர்கள், வரலாற்றில் ஒரு கேள்வியாகவே நிற்கும் – “யார் காரணம்?”


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது