அல்லாஹ் கோவில்ல போய் மந்திரிசுட்டு வாங்க குழந்தைக்கு சரி ஆய்டும்
அன்பான சகோதரர்களே…
இந்த பேச்சு மதத்தைப் பற்றி மட்டும் அல்ல.
இந்த பேச்சு மனிதர்களைப் பற்றி.
இந்த பேச்சு நம்ம ஊரைப் பற்றி.
இந்த பேச்சு நம்ம வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி.
நாம் வாழுற இந்த மண்ணுல கோயிலும் இருக்கு,மசூதியும் இருக்கு,தேவாலயமும் இருக்கு.
ஆனா இந்த மூன்றையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கு.
அது என்ன தெரியுமா?
ஒரு தாய் மனசு.
ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்துருச்சுன்னா?
அது இந்து குழந்தையா?
முஸ்லிம் குழந்தையா?
னு அந்த காய்ச்சல் கேக்குமா?
அப்படி இல்ல.
அழுகை ஒரே மாதிரி தான்.
வலியும் ஒரே மாதிரி தான்.
தாயின் பயமும் கூட ஒரே மாதிரி தான்.
அப்போ என்ன நடக்குது?
நம்ம ஊர்ல
ஒரு குழந்தை அடிக்கடி அழுதா,
உடம்பு சரியில்லாம இருந்தா,
தூங்காம திடுக்கிட்டு எழுந்தா…
உடனே ஒரு குரல் வரும்.
யாரோ ஒரு இந்து அம்மா சொல்வாங்க:
“அல்லாஹ் கோயிலுக்கு போய் பாருங்க,
குழந்தைக்கு சரியாகிடும்.”
![]() |
| குழந்தைக்கு மந்திரிக்கும் இஸ்லாமியர் ai image |
இப்போ இந்த வார்த்தையை நாம கவனிக்கணும்.
“அல்லாஹ் கோயில்”
இது யாருடைய வார்த்தை?
ஒரு இந்துவுடைய வார்த்தை.
அவங்க ஏன் இப்படிச் சொல்றாங்க?
மதத்தை கலக்கணும்னு இல்ல.
மதம் மாற்றணும்னு இல்ல.
வாதம் செய்யணும்னு இல்ல.
அவங்க மனசுல இருக்குறது ஒன்னே ஒன்னு:
“பாவம் குழந்தை… எதாச்சும் நல்லா ஆகணும்.”
இதுதான்
இந்த சமூகத்தின் அழகு.
ஒரு இந்து
ஒரு முஸ்லிம்க்கு
அவனுடைய இறைவனை சுட்டிக் காட்டுறான்.
இதுக்கு பேரு மதவெறியா?
இல்ல.
இதுக்கு பேரு
நம்பிக்கையின் மரியாதை.
அப்போ முஸ்லிம்கள் என்ன செய்றாங்க?
ஒரு முஸ்லிம் அம்மா
தன் குழந்தையை தூக்கிட்டு
எங்கயாவது ஓடறாளா?
இல்ல.
அவள் நம்புறது
கோயிலை இல்ல.
கப்ரை இல்ல.
மந்திரத்தை இல்ல.
தாயத்தையை இல்ல.
அவள் நம்புறது
இறைவனை மட்டும்.
அவள் கையை உயர்த்துவாள்.
கண்ணீரோடு துஆ கேட்பாள்.
“யா அல்லாஹ்…
இந்த குழந்தை நீ தந்த அமாநத்.
இதுக்கு ஷிஃபா நீ தான்.”
அவள் நாக்குல வரும் வார்த்தை:
“அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.”
அது மந்திரம் இல்ல.
அது தாயத்து இல்ல.
அது ஒரு அடைக்கலம்.
“யா அல்லாஹ்,
ஷைத்தானிடமிருந்து
என் குழந்தையை காப்பாற்று.”
இதுதான்
இஸ்லாம் கற்றுத்தர்ற வழி.
ஆனா இங்க ஒரு விஷயம் தெளிவா சொல்லணும்.
சில இடங்களில்
அறியாமையால
சிலர் தாயத்து கட்டுவாங்க.
சிலர் ஊதி விடுவாங்க.
சிலர் பொருளை நம்புவாங்க.
இஸ்லாமிய அடிப்படையில்
இது சரியா?
இல்ல.
தெளிவா சொல்லணும்:
இது ஹராம்.
ஏன் ஹராம்?
ஏன்னா
குணம் தர்றவன்
ஒரு நூல் இல்ல.
ஒரு காகிதம் இல்ல.
ஒரு மனிதன் இல்ல.அது
அல்லாஹ் மட்டுமே.
இது நம்ம அகீதா.
ஆனா
இதை செய்ற எல்லாரையும்
நாம் குற்றவாளியாக பார்க்கக் கூடாது.
ஏன்னா
அவங்க செய்றது
ஷிர்க்(இணை வைத்தல்) பண்ணணும்னு இல்ல.
அவங்க செய்றது
அவங்க பயத்தால.
இங்க தான்
நாம் சமநிலையா நடக்கணும்.
ஒரு பக்கம்
நம்ம அகீதா காப்பாற்றணும்.
மறு பக்கம்
இந்த சமூக ஒற்றுமையை உடைக்கக் கூடாது.
ஒரு இந்து அம்மா
“அல்லாஹ் கோயிலுக்கு போங்க”
னு சொன்னா…
அவளுக்கு
“இது குஃப்ர்”(இறை மறுப்பு)
னு கத்தக்கூடாது.
அவளுக்கு சொல்ல வேண்டியது:
“நன்றி அம்மா.
நாங்க அல்லாஹ்விடமே துஆ கேட்கிறோம்.”
அவ்வளவு தான்.
அவளை திருத்த வேண்டியது
கோபத்தால இல்ல.
அன்பால.
இஸ்லாம் சொல்றது:
மனிதர்களோடு நல்லுறவு.
இறைவனோடு முழு நம்பிக்கை.
இந்த இரண்டும் சேர்ந்தால் தான்
ஒரு முஸ்லிம் முழுமை.
இந்துக்கள் – முஸ்லிம்கள்
இந்த மண்ணுல
நூற்றாண்டுகளா சேர்ந்து வாழ்ந்தாங்க.
ஒருத்தன் துக்கம் வந்தா
மற்றவன் வீட்டுல விளக்கு அணையும்.
ஒருத்தன் சந்தோஷம் வந்தா
மற்றவன் வீட்டுல சோறு வேகும்.
இந்த உறவை
அகீதாவுக்கு எதிரியா மாற்றாதீங்க.
அகீதாவை
உறவுக்கு எதிரியா மாற்றாதீங்க.
இரண்டுக்கும் நடுவுல தான்
இஸ்லாமிய வாழ்க்கை இருக்கு.
குழந்தை சரியானா
“அல்லாஹுக்கு ஷுக்ர்(நன்றி).”
சரியாகலன்னா
“அல்லாஹ் சப்ர்(நம்பிக்கை) தரட்டும்.”
இதுதான் நம்பிக்கை.
இதுதான் சமூகம்.
இதுதான் இந்த மண்ணு..
கொஞ்சம் இதையும் படிங்க சைத்தானிடமிருந்து இறைவன் ஏன் நம்மை பாதுகாக்க நினைக்கின்றான்

கருத்துகள்