திருத்தணியில் நடந்த சம்பவத்தைப் பற்றிய சாமானியனின் வேண்டுகோள்
தண்டனை அதிகரித்தால் தான் குற்றங்கள் குறையும் என்ற அடிப்படையிலே நான் உங்கள் இடத்திலே பேச வந்திருக்கிறேன்.
நேற்று திருத்தணியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு சிறார்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்ற நான்கு பேர், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை ரயிலிலிருந்து கீழே இறக்கி கொடூரமாக வெட்டி இருக்கிறார்கள். இது ஒரு வெட்டு, இரண்டு வெட்டு அல்ல. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான வெட்டுகள். இன்று அந்த இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கும் சாவுக்கும் இடையில் தீவிர சிகிச்சையில் போராடிக்கொண்டிருக்கிறார்.
இப்போது நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி இது:
இது ஒரு சண்டையா? இல்லை ஒரு திட்டமிட்ட கொலை முயற்சியா?
அவர்கள் சாதாரணமாக இருந்தவர்கள் அல்ல.
கஞ்சா, மது போதையில்,
கையில் பட்டாக்கத்தியுடன்,
ரயிலில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு கொண்டிருந்தவர்கள்.
“இப்படி செய்யாதீர்கள்” என்று அந்த சுராஜ் என்ற இளைஞர் சொன்னதற்காக,
“என்னை பார்த்து முறைக்கிறாயா? உன்னை நான் என்ன செய்கிறேன் என்று பார்”
என்று மிரட்டி,
அவனை வெட்டியதோடு மட்டுமல்ல,
அந்த கொலை முயற்சியையே வீடியோ எடுத்து அப்லோடு செய்திருக்கிறார்கள்.
இது வெறும் குற்றம் அல்ல.
இது சமூகத்திற்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கை.
“நாம் எதையும் செய்து தப்பித்துவிடலாம்” என்ற அகம்பாவம்.
ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது?
“அவர்கள் சிறுவர்கள்” என்று சொல்லி,
அந்த நான்கு பேரில் மூன்று பேரை சிறுவர் சீர்திருத்த பள்ளி / கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்திருக்கிறது.
மற்றொரு நபரை “உடம்பு சரியில்லை” என்று சொல்லி,
பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வெளியே அனுப்பி வைத்திருக்கிறது.
இப்போது நான் ஒரு கேள்வியை பொதுமக்களிடம் வைக்கிறேன்:
இது எந்த அளவிற்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும்?
ஒரு மனிதன் ரத்தம் சிந்தி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.
அவனை வெட்டியவர்கள்,
மூன்று நேரம் சாப்பாடு,
பாதுகாப்பு,
மருத்துவ வசதி,
சீர்திருத்தம் என்ற பெயரில்
அமைதியாக வாழ்கிறார்கள்.
அப்படியென்றால் சட்டத்தின் மதிப்பு எங்கே?
நீதியின் நம்பிக்கை எங்கே?
இங்கே தவறு யாருடையது?
அந்த சிறுவர்களா?
இல்லை,
அவர்களுக்கு போதைப்பொருள் கிடைக்கச் செய்த அமைப்பா?
அவர்களை பயன்படுத்தி குற்றம் செய்ய வைத்த அரசியல் பாதுகாப்பா?
“சிறுவர்கள்” என்ற ஒரே வார்த்தையால் எல்லாவற்றையும் மூடி மறைக்கும் சட்டமா?
இன்று இந்த நான்கு சிறுவர்களை வைத்து,
பெரிய தலைவர்கள் அல்லது சமூக விரோதிகள்,
கஞ்சா, மது வாங்கி கொடுத்து,
“போய் வெட்டு” என்று சொன்னால்,
அவர்களுக்கு தண்டனை கிடைக்குமா?
இல்லை.
ஏனென்றால் “அவர்கள் சிறுவர்கள்”.
ஆனால் அங்கே ஒருவரின் உயிர் போயிருக்கிறது.
இதற்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது?
பதில் இல்லை.
கேள்வி மட்டுமே மிச்சம்.
இது போன்ற ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்தால்,
மக்கள் பயத்துடனே வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
இன்று அது வட மாநில இளைஞன்.
நாளை அது ஒரு தமிழன் என்றால்?
அப்போதும் இதே சட்டம் தான்.
அப்போதும் இதே சீர்திருத்தம் தான்.
இங்கே நான் தெளிவாக சொல்கிறேன் –
தவறு அந்த சிறுவர்களை மட்டும் குற்றம் சொல்லி முடித்துவிட முடியாது.
அவர்களை உருவாக்கிய,
அவர்களை பாதுகாத்த,
அவர்களுக்கு பயம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்திய
ஆட்சியாளர்களே இதற்குப் பொறுப்பு.
மக்களே,
தேர்தல் வரும் நேரத்தில்,
சில நூறு ரூபாய்,
சில மதுபாட்டில்,
சில பொய்யான வாக்குறுதிகளுக்காக
நீங்கள் ஓட்டு போட்டால்,
நாளை உங்கள் பிள்ளைகளும்
ரயிலில் வெட்டப்படுவார்கள்,
ரோட்டில் குத்தப்படுவார்கள்.
அப்போது கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.
எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.
அரசாங்கம் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
குற்றம் செய்தவன் சிறுவனாக இருந்தாலும், குற்றம் பெரியதாக இருந்தால் தண்டனையும் பெரியதாக இருக்க வேண்டும்.
போதைப்பொருள்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
சமூக வலைதளங்களில் ஆயுத ரீல்ஸ், வன்முறை வீடியோக்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்டனைகள் அதிகரித்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
இது அரசியல் வாசகம் அல்ல.
இது ஒரு சாமானியனின்
வேண்டுகோள்.
கொஞ்சம் இதையும் படிங்க அம்பேத்கரின் சட்டம் எந்த அளவிற்கு தமிழ்நாட்டுக்கு பொருந்துகிறது

கருத்துகள்