இஸ்லாத்தில் நூஹ் நபி என்று சொல்லக்கூடிய வரும் கிறிஸ்துவத்தில் நோவா என்று சொல்லக்கூடிய வரும் இந்து மதத்தில் மனு என்று சொல்லக்கூடிய வரும் ஒரே நபர் தான்.


 உலகில் மிக முக்கியமான மதங்களில் இந்து மதம் கிறிஸ்துவ மதம் இஸ்லாமிய மதம் மிக முக்கியமானது.

அப்படி சொல்லப்படக்கூடிய அந்த மதங்களில் ஒரே நபரை கொண்டாடும் ஒரு வரலாற்று அமைப்பு உள்ளது.

இஸ்லாத்தில் நூஹ் நபி என்று சொல்லக்கூடிய வரும் கிறிஸ்துவத்தில் நோவா என்று சொல்லக்கூடிய வரும் இந்து மதத்தில் மனு என்று சொல்லக்கூடிய வரும் ஒரே நபர் தான்.

மற்ற இரு மதங்களான கிறிஸ்துவ மதத்திலும் இஸ்லாமிய மார்க்கத்திலும் இந்த நூஹ் நபி பற்றி ஒரே வரலாறு தான் கூறப்பட்டிருக்கிறது. அதாவது பெறும் வெள்ளம் வரப்போகின்றது மக்கள் அனைவரும் நான் கட்டி வைத்த பேழையில் ஏறிக் கொள்ளுங்கள் அதன் மூலம் நாம் காப்பாற்றப்படுவோம் என்று சொல்லப்படக்கூடிய அந்த வரலாற்று நிகழ்வு மூன்று மதங்களிலுமே இடம் பெற்றுள்ளது.

இந்த வெள்ளப் பிரளயம் நடைபெற்றதை நிரூபிக்கும் வகையில் அந்த வெள்ளப் பிரளையத்தின் போது உண்டாக்கப்பட்ட மக்கள் ஏறி வந்த ஜோடி ஜோடியாய் விலங்குகள் ஏறி வந்த  அந்த கப்பலின் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நூக் ஆர்க் என்று சொல்லப்படக்கூடிய இடத்தில் அந்த கப்பல் பாகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்து மதத்திலும் இது போன்ற ஒரு வரலாற்றுத் தொடர் நிகழ்ந்ததாகவே மனு என்று சொல்லப்படக்கூடியவரும் மச்ச அவதாரம் என்று சொல்லப்படக்கூடிய விஷ்ணுவும் சேர்ந்ததாக அந்த நிகழ்வு சொல்லப்படுகிறது.

அதைப்பற்றிய விளக்க காணொளியை தான் இங்கே உங்களுக்கு வழங்கி இருக்கின்றேன். இந்த காணொளியை பார்த்துவிட்டு உங்கள் அழகிய கருத்துக்களை எனக்கு பதிவிடுங்கள் நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது