ஒற்றை கண்ணன் என்று தஜாலை பற்றி கூறும்போது சொல்கிறார்கள்.


 உலகம் அழியும் வேளையில் வரக்கூடிய தஜ்ஜாலை பற்றி தான் இந்த காணொளி பதிவு இருக்கப் போகிறது.

ஒற்றை கண்ணன் என்று தஜாலை பற்றி கூறும்போது சொல்கிறார்கள்.

ஈஸா நபி போல இறந்தவரை உயிர்ப்பித்து நான் தான் கடவுள் என்று பெரும்பாலான மக்களை நம்ப வைப்பான்.

அவன் கைகாட்டி மழை பொழிய செய்தால் மழை பெய்யும் வெயில் அடிக்கச் செய்தால் வெயில் அடிக்கும். இது போன்ற செயல்கள் மூலம் மக்களை ஏமாற்றி நரகத்தின் பக்கம் அழைப்பான்.

பெரும்பாலான யூத மக்கள் அவனைப் பின்பற்றுவார்கள். இறுதியாக ஈசா நபி மீண்டும் உலகிற்கு வந்து அவனை வதம் செய்வார் என்று கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய வேத காமங்கள் சொல்கின்றன.

இறைவன் மனிதர்களைப் படைத்து அவர்கள் எவ்வழி தன் வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என பார்க்கின்றான்.

அப்படி வாழக்கூடிய அவர்கள் செயலை வைத்து அவர்கள் நரகத்தில் இருப்பதாகவும் சொர்க்கத்தில் இருப்பதாகவும் அவர்களை ஆக்குகின்றான்.

ஆனால் இறை வழியில் நடந்து கொண்டிருக்கும் ஒருவர் இந்த தஜ்ஜாலை பின்பற்ற மாட்டார்கள். ஏனென்றால் தஜ்ஜாலை பற்றி நபிகள் நாயகமும் வேத காமங்களும் இறை நம்பிக்கையாளர்களுக்கு தெளிவு படுத்துகின்றன. அவன் வெளிப்படும்போது அவன் செய்கின்ற மாய வித்தைகள் யாவையும் இறை நம்பிக்கையாளர்கள் நிராகரித்து விடுவார்கள். அதைப் பற்றி தெரியாத சில மக்கள் அவனைப் பின்பற்றி நரகத்திற்கு செல்வதற்கான சூழ்ச்சிகள் உண்டாகும். எனவே அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான இந்த காணொளியை முழுவதும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை அழகிய முறையில் பதிவிடுங்கள்.

நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு என்பது மனதின் பிரதிபலிப்பு / கனவு காண்போம்

Protection of Civil Rights Act (PCR Act), 1955 அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினரின் குடிமக்கள் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம்.

இந்துக்களுக்கு மட்டும் அல்ல இஸ்லாமியர்களுக்கும் ராமாயணம் உள்ளது