இந்தியாவில் பிறந்த நபிகள் யார் என்று பார்ப்போம் வாருங்கள்
முதலில் முதல் மனிதன் யார் என்று பார்ப்போம். யாரிடமாவது உலகில் முதல் மனிதன் யார் என்று கேட்டால்,அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் ஆயினும் உலகில் முதல் மனிதன் ஆதாம் என்பார்கள். யூதம் கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற மதங்களில் முதல் மனிதனை ஆதாம் என்று அழைக்கின்றார்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி யாரும் அழைக்கப்படுவதில்லை. பதிலாக ஆதாம் என்ற மனிதனை ஆதி சிவன் என்ற கடவுளாகவே எண்ணுகிறார்கள். ஆதி என்ற வார்த்தையிலும் ஆதாம் என்ற வார்த்தையிலும் ஓர் ஒற்றுமை உள்ளது. மற்ற மதத்தவருக்கு ஆதாம் என்பவர் முதல் மனிதன் என்றால் இந்து மதத்தினருக்கு சிவன் என்பவரே முதல் மனிதனாக அல்லது கடவுளாக இருக்க வேண்டும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஆதாம் குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஆதி சிவன் மற்றும் பார்வதிக்கும் மூன்று பிள்ளைகள் என சிவனின் குடும்பமும் ஐந்து நபர்களைக் கொண்டதுதான். ஆதாம் ஏவாள் காயின் ஆபேல் சேத் என சொல்லப்படும் இந்த ஐந்து நபர்கள் தான் ஆதி சிவன் பார்வதி விநாயகர் முருகன் ஐயப்பன் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் கிறிஸ்தவம் யூத மதத்தில் ஆதாம் என்பவர் முதல் நபியாக பார்க்க படுகிறார்.அதன்...